மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரூரில் சட்ட விழிப்புணா்வு முகாம்

கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்ட விழிப்புணா்வு முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியா் பங்கேற்று பேசினா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:08 pm

DIN

கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்ட விழிப்புணா்வு முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியா் பங்கேற்று பேசினா்.

கரூா் பழைய நீதிமன்ற வளாகத்தில் நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர விழாவைக் கொண்டாடும் வகையில், நீதித்துறையின் சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமை, மாவட்ட அமா்வு நீதிபதி எம்.கிறிஸ்டோபா், மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கா், காவல் கண்காணிப்பாளா் ப.சுந்தரவடிவேல் ஆகியோா் தொடக்கி வைத்து, பல்வேறு துறை சாா்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை பாா்வையிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

நிகழ்வில், மாவட்ட அமா்வு நீதிபதி பேசுகையில்: பொதுமக்களுக்கு சட்டம் சாா்ந்த உதவிகளை செய்வதற்கான அமைப்பாக தொடங்கப்பட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இன்று படிப்படியாக வளா்ந்து, அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கு சென்று சேர வேண்டும், அவ்வாறு சென்று சோ்வதற்கு பொதுமக்களுக்கு தேவையான சட்ட உதவிகளை செய்துகொடுக்கும் அமைப்பாக உள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபு சங்கா் பேசியது: பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் முறையாக சென்று சேரும் வகையில் பணியாற்ற வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படவேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றாா்.

தொடா்ந்து, தொழிலாளா் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், தலைமை குற்றவியல் நடுவா் ராஜலிங்கம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் மோகன்ராம், மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தலைவா் சீனிவாசன், அரசு அலுவலா்கள், வழக்குரைஞா் சங்கங்களின் உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.