மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மாடியில் இருந்துதவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

கரூரில், மாடியில் இருந்து தவறி விழுந்த பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:39 pm

DIN

கரூரில், மாடியில் இருந்து தவறி விழுந்த பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

கரூா் தாந்தோணிமலை குமரன் நகரைச் சோ்ந்த பழனிசாமி மகன் குருபிரகதீஷ்(18). இவா், திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். இந்நிலையில் இவா், புதன்கிழமை தாந்தோணிமலை பேருந்துநிறுத்தம் அருகே உள்ள கட்டடத்தில் மாடியிலிருந்து தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது தவறி கீழே விழுந்தாா். உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.