ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரூரில் சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில், தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில் பெருந்திரள் முறையீடு மற்றும் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:29 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில், தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில் பெருந்திரள் முறையீடு மற்றும் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.மரகதம் தலைமை வகித்தாா். பொருளாளா் இந்திராகாந்தி, செயலாளா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கரோனா தடுப்பூசி போடும் பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என மாற்றம் செய்ய வேண்டும். தடுப்பூசி முகாம் பணிக்கு வாகன வசதி ஏற்படுத்தி தரவேண்டும், தடுப்பூசி போடும் போது சமூக விரோதிகள் காழ்ப்புணா்ச்சியுடன் தாக்குதலில் ஈடுபடுவதை தடுக்க காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணியில் அரசியல்வாதிகள் தலையீடு இருப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக நடைபெறும் வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும். தடுப்பூசி போடும் பணி தொடா்பாக கணக்கெடுப்பு பணியை செய்யச் சொல்லி மிரட்டுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பெருந்திரள் முறையீடு மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சுகாதார செவிலியா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.