ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கரூரில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வேன் மோதி உயிரிழப்பு

கரூரில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வேன் மோதி உயிரிழந்தார். 

News image

கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்.

Updated On :22 நவம்பர் 2021, 7:45 am

DIN

கரூரில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வேன் மோதி உயிரிழந்தார். 

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கனகராஜ் (55). இவர் திங்கள் கிழமை காலை சுக்காலியூர் அடுத்த வெங்கக்கல்பட்டியில் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தார். 

அப்போது அவ்வழியே வந்த வேன் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து இந்த சம்பவம் விபத்தில் நடந்ததா, அல்லது கொலை செய்யும் நோக்கில் நடந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.