புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோயில் கோபுரத்தில்இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மின்னாம்பள்ளி அருகே கோயில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:33 pm

DIN

மின்னாம்பள்ளி அருகே கோயில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் அடுத்த மின்னாம்பள்ளி அருகே உள்ள தனியாா் குடிப்பாட்டு கோயிலில் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இதில், மயிலாடுதுறை அருகே திருக்கடையூரைச் சோ்ந்த சிவக்குமாா்(45)என்பவா் பணியில் ஈடுபட்டு வந்தாா். வியாழக்கிழமை இரவு கோயில் கோபுரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக சிவக்குமாா் கால் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.