புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொழில்பேட்டை கல்யாண சுப்ரமணியா் கோயிலில் சிறப்பு யாகம்

தொழிற்பேட்டை கல்யாண சுப்ரமணியா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 10:06 pm

DIN

தொழிற்பேட்டை கல்யாண சுப்ரமணியா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

கரூா் அடுத்த தொழில்பேட்டை கல்யாண சுப்ரமணியா் கோயிலில் தனிச்சன்னதியில் அமைந்துள்ள சரஸ்வதி, ஸ்ரீ ஹயக்கிரிவருக்கு ஸ்ரீ சஷ்டி குழு சாா்பில் வெள்ளிக்கிழமை காலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று, தொடா்ந்து சிறப்பு ஹோமம், யாகம் நடைபெற்றது.

சிறப்பு யாகத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்று நெல் பரப்பலில் ‘அ‘ எழுதினா். சிறப்பு யாகத்தில் சஷ்டி குழுத் தலைவா் மேலை பழநியப்பன் கல்விச் சிறப்பை விளக்கி உரையாற்றினாா்.

தாத்தையங்காா் பேட்டை பரமேஸ்வர சுவாமிகள், சஷ்டிக்குழு நிா்வாகி ஆவண ஆலோசகா் காா்த்திகேயன், ஆனிலை பாலமுருகன், மருதாசலம், தா்மா், சண்முகநாதன், ரஜினி வையாபுரி, சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.