புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

போக்குவரத்து பணியாளா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் போக்குவரத்துப் பணியாளா்கள் சம்மேளனத்தினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 7:34 pm

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் போக்குவரத்துப் பணியாளா்கள் சம்மேளனத்தினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவா் வி.பழனிசாமி தலைமை வகித்தாா்.மண்டல இணைச் செயலாளா் எஸ்.உத்திரராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஓய்வூதியா்களின் 72 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்துக்கழக பணியாளா்கள் சம்மேளனத்தினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.