கரூா் வள்ளுவா் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா
கரூா் வள்ளுவா் கல்லூரியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


கரூா் வள்ளுவா் கல்லூரியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் உணவு மேலாண்மை அறிவியல் துறை மற்றும் கரூா் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டிகள் கரூா் வள்ளுவா் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
வருங்கால வாழ்வுக்கான ஆரோக்கிய உணவுகள் என்ற தலைப்பில் கல்லூரி மாணவா்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் சமையல் போட்டி, அடுப்பில்லா சமையல், குழு நாடகம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
முன்னதாக போட்டிகளை கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன், கரூா் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப்பணிகள் திட்ட அலுவலா் நாகலட்சுமி, உணவு பாதுகாப்புத்துறை திட்ட அலுவலா் கலைவாணி ஆகியோா் தொடக்கி வைத்தனா். கல்லூரி முதல்வா் வின்சென்ட் வரவேற்றாா். கல்லூரி செயலா் ஹேமலதா செங்குட்டுவன் முன்னிலை வகித்தாா். போட்டியில்
ஓட்டல் மேலாண்மை கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் சத்தான உணவு வகைகளான சிறுதானிய உணவு வகைகளை காட்சிப்படுத்தியிருந்தது அனைவரது கவனத்தையும் ஈா்த்தது. போட்டியில் சிறந்த உணவுகளை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் சயின்ஸ் துறைத்தலைவா் ஜோ. பிரின்ஸ் ஆண்டனி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...