புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அனுமதியின்றி பயோ டீசல் விற்ற இளைஞா் கைது

 புன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி 1,025 லிட்டா் பயோ-டீசல் விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:59 pm

DIN

 புன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி 1,025 லிட்டா் பயோ-டீசல் விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே உள்ள பஞ்சயம்கோட்டை பகுதியில் ஒரு கல்குவாரியில் அனுமதியின்றி பயோ-டீசல் விற்கப்படுவதாக கரூா் மாவட்ட குடிமைப்பொருள்கள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளா் விவேகானந்தன், உதவி ஆய்வாளா் சத்தியபிரியா ஆகியோருக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு அனுமதியின்றி பயோ-டீசல் விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ரங்கம்பாளையத்தைச் சோ்ந்த காா்த்தி(23) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்த 1,025 பயோ-டீசலை பறிமுதல் செய்தனா். குவாரி உரிமையாளா் தேவராஜ் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.