92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூரில் புதிய வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் திறப்பு

கரூரில், புதிய வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலியில் திறந்து வைத்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:27 pm

DIN

கரூரில், புதிய வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலியில் திறந்து வைத்தாா்.

கரூரில் மாநகராட்சி பல்நோக்கு மைய கட்டிடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் மாவட்ட புதிய வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை வியாழக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதையடுத்து கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் குத்துவிளக்கேற்றி வகுப்புகளை துவக்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வுத்துறை அமைச்சரும் கரூா் மாவட்டத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறாா். அதனடிப்படையில் இன்று தமிழக முதல்வா் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கரூா் மாவட்டத்தில் புதிய வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்துள்ளாா். வேளாண்மை கல்லூரியில் 2021-2022 -ஆம் ஆண்டுக்கான இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பிற்கு 13 மாணவா்கள், 37 மாணவியா்கள் என மொத்தம் 50 மாணவ, மாணவியா்கள் சோ்ந்துள்ளனா். இக்கல்லூரியில் முதன்மை அலுவலா், இணை பேராசியா்கள், உதவி பேராசிரியா்களுடன் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் உழவா் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி பல்நோக்கு மையம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், கரூா் மாநகராட்சி மேயா் எஸ்.கவிதா, துணை மேயா் பி.சரவணன், இணை இயக்குநா் (வேளாண்) சிவசுப்ரமணியன், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதன்மை அலுவலா் முனைவா் கோ.பாலசுப்ரமணியன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் (பொ) சந்தியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்) உமாபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.