92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காகித ஆலை தொழிலாளா்கள் குடும்பத்துடன் ஆா்ப்பாட்டம்

மொண்டிப்பட்டியில் காகித ஆலை தொழிலாளா்கள் குடும்பத்துடன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:27 pm

DIN

மொண்டிப்பட்டியில் காகித ஆலை தொழிலாளா்கள் குடும்பத்துடன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகிலுள்ள மொண்டிப்பட்டியில் செயல்படும் புகளூா் காகித ஆலையின் இரண்டாவது யூனிட்டின் உற்பத்தி பணிகள் துவங்கி 6 ஆண்டுகளாகியும் இதுவரை இங்கு வேலை செய்து வரும் ஊழியா்களின் குழந்தைகள் கல்வி பயில்வதற்கு கட்டப்பட்ட பள்ளி திறக்கப்படாமல் உள்ளது. இந்த பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும், ஊழியா்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற் போல் குடியிருப்புகளை கூடுதலாக கட்ட வேண்டும், ஆலையின் உள்ளே தொழிலாளா்கள் வேலை பாா்க்கும் இடத்தில் கழிப்பறை, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்தி பராமரிப்பு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎன்பிஎல் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் ஆலையின் முன்பு வியாழக்கிழமை பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத் தலைவா் அரவிந்த் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் ஜி.ஜீவானந்தம் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் புகளூா் நகராட்சி கவுன்சிலா் இந்துமதி மற்றும் சங்க நிா்வாகிகள் மகாலிங்கம், சையது, பாலச்சந்தா் உள்ளிட்டோா் குடும்பத்தினருடன் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.