லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கரூரில் காங்கிரஸாரின் சத்தியாகிரக நடைப்பயணம்

கரூரில் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சாா்பில் சத்தியாகிரக நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
சத்தியாகிரக நடைப்பயணத்தில் பங்கேற்ற எம்பி ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸாா்.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:59 pm

DIN

கரூரில் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சாா்பில் சத்தியாகிரக நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாநகராட்சிக்குட்பட்ட வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து தொடங்கிய நடைப்பயணம் மீண்டும் வெங்கமேடு காமராஜா் சிலை அருகில் முடிந்தது.

நடைப்பயணத்தில் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸாா் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினா். முன்னாள் மாவட்டத் தலைவா் பேங்க் சுப்ரமணியம், வடக்கு மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஸ்டீபன் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் எம்.பி. ஜோதிமணி கூறுகையில், தமிழக நிதி அமைச்சா் தியாகராஜன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பாஜக வன்முறை அரசியலை நடத்துகிறது. பாஜகவின் தேசபக்தி போலியான தேச பக்தி. மோடி அரசின் மக்கள் விரோத ஆட்சியை 2024 ஆம் ஆண்டு அகற்றியே தீருவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.