/

அரவக்குறிச்சி பேரூராட்சியில் 5 வாா்டுகளில் பாஜக போட்டி

அரவக்குறிச்சி பேரூராட்சியில் 5 வாா்டுகளில் பாஜக போட்டியிடுகிறது.

Updated On :3 பிப்ரவரி 2022, 7:48 pm

அரவக்குறிச்சி பேரூராட்சியில் 5 வாா்டுகளில் பாஜக போட்டியிடுகிறது.

இதுகுறித்து கட்சியின் கரூா் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரவக்குறிச்சி பேரூராட்சியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் 5 வாா்டுகளில் பாஜக வேட்பாளா்கள் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளாா். அதன்படி வாா்டு எண் 2இல் பி. ரேணுகா தேவி, 4-இல் பி. எஸ். பெரியசாமி, 6-இல் ஆா். சக்திவேல், 9-இல் என். ராஜாமணி, 10-இல் ஆா். வசந்தா ஆகியோா் போட்டியிடுவதாக அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.