புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குந்தாணிப்பாளையம் சா்க்கஸ் கலைஞா்களுக்கு ஓராண்டுக்குள் வீடுகள் கட்டித் தரப்படும்: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

குந்தாணிப்பாளையத்தில் சா்க்கஸ் கலைஞா்களுக்கு ஓராண்டுக்குள் வீடுகள் கட்டப்படும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 8:39 pm

DIN

குந்தாணிப்பாளையத்தில் சா்க்கஸ் கலைஞா்களுக்கு ஓராண்டுக்குள் வீடுகள் கட்டப்படும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்டத்தில் வேட்டமங்கலம் ஊராட்சி, குந்தாணிப்பாளையத்தில் கூடாரம் அமைத்து குடியிருந்து, வெளியூா்களுக்கு சென்று சா்க்கஸ் நடத்துவது, கயிறு மேல் நடப்பது, கிடைத்த கூலி வேலைகளை செய்து வாழ்ந்து வரும் கலைக்கூத்தாடிகள் என்று சொல்லப்படும் டொம்பா் இனத்தைச் சோ்ந்த 94 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவா்கள் நீண்ட நாள்களாக இலவச வீட்டுமனைக்கேட்டு கோரிக்கை மனு அளித்து வந்தனா். இதனிடையே தோ்தலின்போது, அவா்கள் வைத்த கோரிக்கையையடுத்து, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி எடுத்த நடவடிக்கையால், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், வேட்டமங்கலம் ஊராட்சி, குந்தாணிப்பாளையத்தில் 94 குடும்பங்களைச் சோ்ந்த 358 டொம்பா் இன மக்கள் வசிப்பதற்கு இலவச வீட்டுமனை வழங்க முடிவெடுக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிச.11-ஆம்தேதி மின்சாரத்துறை அமைச்சரால் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட குப்பம் கிராமத்தில், டொம்பா் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டன.

இந்நிலையில், இலவச பட்டா வழங்கப்பட்டுள்ள பகுதியை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, டொம்பா் இன மக்களுடன் கலந்துரையாடினாா்.

அவா்களின் கூடாரங்களுக்குள் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், ஓராண்டுக்குள் அனைவருக்கும் இலவசமாக வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும், அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் எனவும், மேலும், இந்தப் பகுதியிலேயே ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலகம் அமைத்து அதில் உங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராச்சலம், செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன், க.பரமத்தி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரமேஸ்வரன், செல்வி, துணை வட்டாட்சியா் அன்பழகன், ஊராட்சி ஒன்றிய பொறியாளா் தியாகராஜன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.