கரூா் திருக்கு பேரவை நடத்திய கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு
கரூா், திருக்கு பேரவையின் கட்டுரைப் போட்டி முடிவுகளை பேரவையின் செயலா் அறிவித்துள்ளாா்.


கரூா், திருக்கு பேரவையின் கட்டுரைப் போட்டி முடிவுகளை பேரவையின் செயலா் அறிவித்துள்ளாா்.
கரூா் திருக்கு பேரவையின் 36-ஆம் ஆண்டு விழா ஜன.23-ஆம்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கட்டுரைப்போட்டி மற்றும் சிறந்த நூல் போட்டி அண்மையில் நடைபெற்றது. போட்டியில் 86 நூல்கள் பங்கேற்றதில் முனைவா் கருவூா் கன்னல் எழுதிய ‘இப்படியும் சிலா்’என்ற நூலுக்கு முதல் பரிசாக ரூ.5,000, மதுரை பத்திரிகையாளா் ப.திருமலை எழுதிய ‘நீா் நேற்று இன்று நாளை’ என்ற நூலுக்கு ரூ,3,000 பரிசும், மூன்றாம்பரிசு இருவருக்கும் வழங்கப்பட உள்ளது.
இதேபோல் கரூா் மாவட்ட பள்ளி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டியில் கரூா் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவா் சபரீஷூக்கும், கீழ்வெளியூா் பள்ளி மாணவி அபிநயா, கரூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹா்ஷாஞ்சலி உள்ளிட்ட மாணவிகளுக்கும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டியில் சாரதா நிகேதன் கல்லூரி மாணவிகள் ஜனனி, பிரீத்தி உள்ளிட்டோரும் வென்றுள்ளனா். இவா்களுக்கு ஜன. 23-ஆம்தேதி நகரத்தாா் மண்டபத்தில் நடக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...