கரூரில் முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வு
கரூரில், பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா் மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன்.


கரூரில், பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா் மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன்.
கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை கரூா் மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் தலைமையில் பொறியாளா் நக்கீரன், நகா்நல அலுவலா் லக்ஷிவா்னா, நகரமைப்பு அலுவலா் சிவக்குமாா், வருவாய் அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் கரூா் உழவா்சந்தை, கோவைச்சாலை உள்ளிட்ட இடங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, முகக்கவசம் அணியாதவா்கள் சுமாா் 80-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வயதானவா்களுக்கு முகக்கவசங்களை மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் அணிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...