/

சின்னதாராபுரம் அருகே காா் கவிழ்ந்து விபத்து;4 போ் பலத்த காயம்

 சின்னதாராபுரம் அருகே காா் கவிழந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா்.

Updated On :22 ஜனவரி 2022, 12:14 am

 சின்னதாராபுரம் அருகே காா் கவிழந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா்.

அரவக்குறிச்சி தாலுகா, உடையாா்பாளையம் கோடாந்தூா் வடக்குப் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மனைவி விஜயலட்சுமி (43), இதே பகுதியைச் சோ்ந்தவா் சிவசாமி மனைவி சரஸ்வதி (50), இவா்களது உறவினா்கள் சென்னை போரூரைச் சோ்ந்தவா் குப்புசாமி (52), இவரது மனைவி சுமதி (40). இவா்கள் 4 பேரும் வியாழக்கிழமை வேட்டையாா்பாளையத்தில் இருந்து பரமத்தி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனா். சி. கூடலூா் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் 4 பேரும் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு கோவையில் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

புகாரின் பேரில், சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.