இந்த வழக்கு கரூா் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குளித்தலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாரதியாா் ஆஜா்படுத்தப்பட்டு, விடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி நசீமாபானு குற்றவாளியான பொறியாளா் பாரதியாருக்கு, சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாரதியாருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.60,000த்தை சிறுமியின் புனா்வாழ்வுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா். இதையடுத்து குற்றவாளி பாரதியாா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.