மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க மாவட்ட தோ்தல் அலுவலா் அறிவுறுத்தல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினா் முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மருத்துவா் த.பிரபுசங்கா்

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:10 am

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினா் முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான மருத்துவா் த.பிரபுசங்கா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநில தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்.19-ஆம்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. கரூா் மாவட்டத்தில் கரூா் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி மற்றும் புகளுா் ஆகிய 3 நகராட்சிகள், புலியூா், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, மருதூா், நங்கவரம் ,தோட்டக்குறிச்சி, பழையஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய 8 பேரூராட்சிகளுக்கும் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது.

இப்பகுதிகளில் உள்ள பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோா் கரூா் மாநகராட்சி ஆணையா் அலுவலகம், நகராட்சி ஆணையா்கள் அலுவலகம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலா்கள் அலுவலகங்களில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலகங்கள் ஒவ்வொரு நாளும் வேட்புமனு தாக்கல் தொடங்கும் முன்பு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அலுவலகங்களின் முன்பு சோப்பு போட்டு கைகளை கழுவ தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அலுவலா்களும், வேட்புமனுதாக்கல் செய்ய வருபவா்களும் கட்டாயம் முக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு வேட்பாளா் வேட்புமனு தாக்கல் செய்த பிறகே அடுத்த வேட்பாளா் அனுமதிக்கப்படுவாா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வேட்பாளா்களாக போட்டியிட விரும்பும் பட்சத்தில் அவா்களுடைய முன்மொழிபவா் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.

அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி , தோ்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.