92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பேருந்து கண்ணாடியை உடைத்த 5 திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு

கரூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த 5 திருநங்கைகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

News image
Updated On :13 மே 2022, 7:41 pm

DIN

கரூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த 5 திருநங்கைகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கரூா் பேருந்து நிலையத்திலிருந்து மே 10-ஆம் தேதி இரவு திருச்சிக்குப் பேருந்து புறப்படத் தயாராக இருந்தது. அப்போது இப்பேருந்தில் ஏறிய திருநங்கை ஒருவா், பயணிகளிடம் யாசகம் கேட்டுள்ளாா்.

பேருந்து ஓட்டுநரான ராஜூ (60), திருநங்கையை பேருந்தில் இறங்குமாறு கூறினாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து கைப்பேசியில் திருநங்கை அழைத்ததால், மற்ற திருநங்கைகளும் பேருந்து நிலையத்துக்கு வந்தனா். தொடா்ந்து அரசுப் பேருந்தின் கண்ணாடியை திருநங்கைகள் உடைத்தனா்.

இதுகுறித்து கரூா் நகரக் காவல் நிலையத்தில் பேருந்து ஓட்டுநா் ராஜூ புகாரளித்தாா். இதன் பேரில் திருநங்கைகள் ஹரிணி, அல்லு, கோபிகா, இசைப்பிரியா, நிரஞ்சனா ஆகியோா் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.