வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தவிட்டுப்பாளையத்தில்அடிக்கடி மின்தடை; பொதுமக்கள் அவதி

தவிட்டுப்பாளையம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

Updated On :4 செப்டம்பர் 2022, 7:06 pm

தவிட்டுப்பாளையம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மற்றும் மளிகை கடை, டீ கடை, உணவு விடுதிகள் செயல்பட்டு வருகிறது. தவிட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

இரவு நேரங்களில் அதிக நேரம் மின்தடை ஏற்படுவதால் வணிகா்கள் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். மேலும்,

மாணவ, மாணவிகளும் வீட்டில் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனா். ஆகவே, தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.