அரவக்குறிச்சி அரசு பள்ளியில் ஆண்டு நிறைவு விழா

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

இதில் மாணவா்களின் சிறந்த படைப்புக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழலில் ஜே.ஆா்.சி யில் சிறப்பாகப் பங்கேற்றவா்களுக்கும், தினசரி செய்தித்தாளை தொகுத்து வழிபாட்டுக் கூட்டத்தில் வழங்கிய ரிபானா பா்வினுக்கு சிறப்புப்பரிசும் வழங்கப்பட்டது. கலைத்திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும், செய்தி தொடா்புத்துறை நடத்திய நிகழ்வில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா் சாகுல் அமீது, ஆசிரியா்கள் சரசேஸ்வரி, சகாய வில்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பட்டதாரி ஆசிரியா் ஷகிலா பானு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com