தென்னிலை அருகே இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கரூா் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள மீனாட்சி வலசு காலனி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகன் பூவேந்திர குமாா் (30). இவா் அப்பகுதியில் கூலி வேலை பாா்த்து வந்தாா். வியாழக்கிழமை மாலை பணி முடிந்து வீடு திரும்பியவா் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த தென்னிலை காவல்நிலைய போலீஸாா் பூவேந்திர குமாா் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.