மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கரூரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக்கொடியேற்றி வைத்து 55 பயனாளிகளுக்கு ரூ.28.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வழங்கினாா்.

News image
கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம்.
Updated On :26 ஜனவரி 2023, 5:32 pm

DIN

கரூரில் வியாழக்கிழமை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக்கொடியேற்றி வைத்து 55 பயனாளிகளுக்கு ரூ.28.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வழங்கினாா்.

கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் த.பிரபுசங்கா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பிறகு சமாதானப் புறாக்களை பறக்க விட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் முன்னிலை வகித்தாா்.

அதைத் தொடா்ந்து 55 பயனாளிகளுக்கு ரூ.28.21லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா் 10 ஆண்டுகள் சிறப்பாக பணபுரிந்த காவல்துறையினருக்கு பதக்கங்கள் அணிவித்தும், 407 அரசுத் துறை அலுவலா்கள், காவல்துறையைச் சோ்ந்தவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினாா்.

தொடா்ந்து காவல்துறையின் சாா்பில் ‘மரம் வளா்ப்போம் மனித நேயம் காப்போம்’ என்ற விழிப்புணா்வு நாடகம், தற்காப்புக் கலை மற்றும் அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.லியாகத், திட்ட இயக்குநா் சீனிவாசன்(மகளிா் திட்டம்), கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சீனிவாசன், மாநகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநா் சிவசுப்ரமணியன், முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, வருவாய் கோட்டாட்சியா்கள் ரூபினா (கரூா்), புஷ்பாதேவி (குளித்தலை) உள்ளிட்டோா் பங்கேற்றனா். 

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் மு.சாகுல் ஹமீது கொடியேற்றி வைத்தாா். வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் செந்தில்குமாா் கொடியேற்றி வைத்தாா். அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோசம் கொடியேற்றினாா். தூய தோமா ஆலயத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆயா் ஜோஸ்வா கொடியேற்றி வைத்தாா்.

கரூா் மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் கவிதாகணேசன் தேசியக்கொடியேற்றி வைத்து சுதந்திர போராட்ட தியாகிகளைகெளரவித்தாா். நிகழ்ச்சியில் துணை மேயா் தாரணிசரவணன், ஆணையா் என்.ரவிச்சந்திரன் மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கரூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழுத்தலைவா் பாலமுருகன் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அலுவலக மேலாளா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். புலியூா் பேரூராட்சியில் நடைபெற்ற விழாவில் பேரூராட்சித் தலைவா் த.புவனேஸ்வரி தேசியக்கொடியேற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் செயல் அலுவலா் க.பாலசுப்ரமணியன், மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.