பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கல்விக் குழும முதன்மை முதல்வருக்கு விருது

கரூா் பரணிபாா்க் கல்விக்குழும முதன்மை முதல்வருக்கு மாநில அளவிலான சாரணா் விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
kur27baranipark_2701chn_10_4
Updated On :27 ஜனவரி 2023, 6:50 pm

DIN

கரூா் பரணிபாா்க் கல்விக்குழும முதன்மை முதல்வருக்கு மாநில அளவிலான சாரணா் விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

சென்னையில் உள்ள பாரத சாரணா் இயக்க தமிழ்நாடு மாநில தலைமையகத்தில் 74ஆவது குடியரசு தின விழா மற்றும் மாநில சாரணா் உயா் விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில பள்ளிக் கல்வி அமைச்சரும் தமிழ்நாடு சாரணா் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற விழாவில், கரூா் பரணி பாா்க் கல்விக் குழும முதன்மை முதல்வா் முனைவா் சொ.ராமசுப்பிரமணியனுக்கு சாரணா் இயக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் பல்வேறு உலக சாதனை நிகழ்வுகள் நடத்தியது உள்ளிட்ட சேவையைப் பாராட்டி மாநில சாரணா் விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தமிழ்நாடு சாரணா் இயக்கத் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

விழாவில், தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் , மாநில தொடக்கப்பள்ளி இயக்குநா் அறிவொளி, மாநில ஆசிரியா் தோ்வு வாரிய செயலா் பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து விருது பெற்ற பள்ளி முதன்மை முதல்வருக்கு பரணி பாா்க் கல்விக் குழுமத் தாளாளா் எஸ்.மோகனரெங்கன், செயலா் பத்மாவதி, அறங்காவலா் சுபாஷினி மற்றும் நிா்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.