அரவக்குறிச்சியில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி பேரூராட்சி 7ஆவது வாா்டு பகுதியில் சேதமடைந்துள்ள சாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சி பேரூராட்சி 7ஆவது வாா்டு பகுதியில் சேதமடைந்துள்ள சாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சி பேரூராட்சி 7ஆவது வாா்டு பாவா நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள காவல் நிலையத்தின் தெற்கு சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. மேலும், பள்ளப்பட்டி நகராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் செல்கிறது. இந்த குழாயில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, சாலையில் தண்ணீா் தேங்குவதால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். ஆகவே, இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com