சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரூா் கைப்பேசி கடையில் தீ

கரூரில் கைப்பேசி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:19 pm

Din

கரூரில் கைப்பேசி கடையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் எரிந்து சேதமடைந்தன.

கரூா் ஜவஹா்பஜாரில் கைப்பேசி கடை நடத்தி வருபவா் ராஜேஷ். பூட்டியிருந்த இவரது கடையில் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது.

இதையடுத்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும் இந்த தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள், பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.