நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரூா் மாவட்டத்தில் 2,601 பேருக்கு எய்ட்ஸ் தடுப்பு கூட்டுமருந்து சிகிச்சை: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் 2,601 பேருக்கு எய்ட்ஸ் தடுப்பு ஏ.ஆா்.டி. கூட்டுமருந்து சிகிச்சையளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:40 pm

Din

கரூா் மாவட்டத்தில் 2,601 பேருக்கு எய்ட்ஸ் தடுப்பு ஏ.ஆா்.டி. கூட்டுமருந்து சிகிச்சையளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் அலுவலா்கள் அனைவரும் எய்ட்ஸ் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். பின்னா் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மனிதசங்கிலியும், வாகனங்களில் விழிப்புணா்வு வில்லைகளையும் ஆட்சியா் ஒட்டினாா்.

தொடா்ந்து ஆட்சியா் கூறுகையில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் நிகழாண்டு ‘உரிமைப்பாதையில்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவா்களை கண்டறிய அதிக நம்பிக்கை மையங்களுக்கான சிகிச்சை வழங்கும் கூட்டும் மருந்து சிகிச்சை மையங்கள் உள்ளன. கரூா் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் 16 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களில் இலவச எச்.ஐ.வி பரிசோதனையும், 16 சுகவாழ்வு மையங்களில் பால்வினை நோய் குறித்த பரிசோதனைகளும் உடனடி சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் இலவச ஏ.ஆா்.டி கூட்டுமருந்து சிகிச்சை மையத்தில் 2,601 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.

தொடா்ந்து எச்.ஐ.வி, நோயால் பாதிக்கப்பட்டவா்களுடன் அமா்ந்து ஆட்சியா் உணவு சாப்பிட்டாா்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் லோகநாயகி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலா் சுமதி, மருத்துவக் கண்காணிப்பாளா் ராஜா மற்றும் சுகாதாரத்துறை பணியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.