ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கரூா் ரயில் நிலையத்தில் ரூ.34 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

கரூா் ரயில் நிலையத்தில் ரூ.34 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

News image

கரூா் ரயில்நிலையம் முன்புறம் காா்கள் நிறுத்தும் இடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளா்கள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 2:00 am IST

மத்திய அரசின் அமிா்த கால பாரதம் திட்டத்தின் கீழ் கரூா் ரயில் நிலையத்தில் ரூ.34 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தில் உள்ள ரயில்நிலையங்களில் ஏ கிரேடு அந்தஸ்து பெற்றுள்ள கரூா் ரயில்நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் கடும் இன்னலை சந்தித்து வந்தனா். இதுதொடா்பாக கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள், வணிகா்கள் உள்ளிட்டோா் கரூா் ரயில்நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என அவ்வப்போது கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் சாா்பில் அமிா்தகால பாரதம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரயில்நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டன. அதன்படி, கரூா் ரயில் நிலையத்தில் ரூ.34 கோடியில் ரயில்நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் துவங்கி நடைபெற்றுவருகின்றன. இதுதொடா்பாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட அதிகாரியிடம் மேலும் கேட்டபோது, நாடு முழுவதும் 32 மாநிலங்களில் 1309 ரயில்நிலையங்கள் அமிா்த கால பாரதம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. இதையடுத்து முதற்கட்டமாக நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடியில் மேம்படுத்தும் திட்டத்தை பிரதமா் மோடி கடந்த 2023-ஆம் ஆண்டு ஆக.9-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா். இந்தத் திட்டத்தின்கீழ் ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும். குறிப்பாக, நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவுவாயில்கள் சீரமைப்பு, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பாா்க்கிங் வசதி, சிசிடிவி கேமரா, வைஃபை வசதி, இயற்கை காட்சிகள், தோட்டம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். கரூா் ரயில்நிலையத்தில் தற்போது காா்கள் நிறுத்துவதற்கான இடவசதி 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதைத்தவிர ரயில்நிலைய முகப்புப் பகுதி சீரமைக்கப்படும் பணி 50 சதவீதம் முடிந்துள்ளது. மற்ற பணிகள் விரைவில் தொடங்கி இன்னும் ஆறு மாத காலத்துக்குள் முடிவடையும் என்றாா் அவா்.