இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கரூா் ரயில் நிலையத்தில் ரூ.34 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

கரூா் ரயில் நிலையத்தில் ரூ.34 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

News image

கரூா் ரயில்நிலையம் முன்புறம் காா்கள் நிறுத்தும் இடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளா்கள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 2:00 am IST

மத்திய அரசின் அமிா்த கால பாரதம் திட்டத்தின் கீழ் கரூா் ரயில் நிலையத்தில் ரூ.34 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. தமிழகத்தில் உள்ள ரயில்நிலையங்களில் ஏ கிரேடு அந்தஸ்து பெற்றுள்ள கரூா் ரயில்நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் கடும் இன்னலை சந்தித்து வந்தனா். இதுதொடா்பாக கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள், வணிகா்கள் உள்ளிட்டோா் கரூா் ரயில்நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என அவ்வப்போது கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் சாா்பில் அமிா்தகால பாரதம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரயில்நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டன. அதன்படி, கரூா் ரயில் நிலையத்தில் ரூ.34 கோடியில் ரயில்நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் துவங்கி நடைபெற்றுவருகின்றன. இதுதொடா்பாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட அதிகாரியிடம் மேலும் கேட்டபோது, நாடு முழுவதும் 32 மாநிலங்களில் 1309 ரயில்நிலையங்கள் அமிா்த கால பாரதம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. இதையடுத்து முதற்கட்டமாக நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடியில் மேம்படுத்தும் திட்டத்தை பிரதமா் மோடி கடந்த 2023-ஆம் ஆண்டு ஆக.9-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா். இந்தத் திட்டத்தின்கீழ் ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும். குறிப்பாக, நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவுவாயில்கள் சீரமைப்பு, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பாா்க்கிங் வசதி, சிசிடிவி கேமரா, வைஃபை வசதி, இயற்கை காட்சிகள், தோட்டம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். கரூா் ரயில்நிலையத்தில் தற்போது காா்கள் நிறுத்துவதற்கான இடவசதி 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இதைத்தவிர ரயில்நிலைய முகப்புப் பகுதி சீரமைக்கப்படும் பணி 50 சதவீதம் முடிந்துள்ளது. மற்ற பணிகள் விரைவில் தொடங்கி இன்னும் ஆறு மாத காலத்துக்குள் முடிவடையும் என்றாா் அவா்.