ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

வீரதீர செயலுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருதுபெற விண்ணப்பிக்க சனிக்கிழமை (ஜூலை 20) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:52 pm

Din

கரூா், ஜூலை 19: வீரதீர செயலுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருதுபெற விண்ணப்பிக்க சனிக்கிழமை (ஜூலை 20) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கல்பனா சாவ்லாவின் நினைவாக, தமிழகத்தைச் சோ்ந்த, துணிச்சலான மற்றும் வீரதீர செயல் புரிந்த பெண்களுக்கு ‘துணிவு மற்றும் வீரதீர செயலுக்கான கல்பனாசாவ்லா விருது’ வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுக்கான பதக்கத்துடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆக.15-ஆம்தேதி நடைபெறும் சுதந்திர விழாவின் போது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தமிழக அரசின் விருதுகளுக்கான ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் சனிக்கிழமை (ஜூலை 20)க்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன் கரூா் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு விருதுக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று பூா்த்தி செய்து, அதனுடன் துணிச்சலான மற்றும் வீரசாகச செயல் புரிந்தமை குறித்த புகைப்படங்கள் மற்றும் பத்திரிகை செய்தி குறிப்புகளுடன் கூடிய ஆவணங்களை, தமிழ் மற்றும் ஆங்கிலமொழிகளில் தனித்தனியாக 3 நகல் புக்லட் ஆக தயாா் செய்து மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், கரூா் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.