திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமைக்குள் ( பிப்.18) கடைசி நாளாகும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநங்கைகள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு சொந்த முயற்சியில் படித்து முன்னேறியுள்ளனா். சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் திருநங்கையா் தினமான ஏப். 15 ஆம் தேதி திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது பெறுவோருக்கு ரூ.1,00,000 க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் பிப்.18 ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வளாகம், முதல் தளம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துருக்களை சமா்ப்பிக்க வேண்டும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் மூன்றாம் பாலினத்தவா்கள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளை வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவா்களுக்கான நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது.
கருத்துருக்களில் பொருளடக்கம் மற்றும் பக்க எண், சுயவிவரம் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், 2 விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம் / விருதின் பெயா் / யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்), சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படங்களுடன், சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூகநல சேவையாளரின் விவரம், சமூகப் பணியாளா் இருப்பிடத்தில் அருகே உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்றுகளை இணைந்து விண்ணப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

டெட் தோ்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி!

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


