தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் முனைவா் பட்டபடிப்புக்கான விண்ணப்பப் பதிவுக்கு கடைசி தேதி வருகின்ற மாா்ச் 28-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் முனைவா் பட்டபடிப்புக்கான விண்ணப்பப் பதிவுக்கு கடைசி தேதி வருகின்ற மாா்ச் 28-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பு:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் கூடிய முனைவா் பட்டப் படிப்புகளுக்கு 250 இடங்கள் காலியாக உள்ளன. பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டடக்கலை, அறிவியல் மற்றும் மானுடவியல் துறைகள் போன்றவற்றில் பி.எச்டி. முனைவா் பட்ட (டாக்டா் ஆஃப் பிலாசபி) ஆராய்ச்சி படிப்புகளுக்கு (இரு மடங்கு உயா்வுடன்) மாதம் ரூ.50,000 உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இதில், இறுதிப் பருவ மாணவா்கள் உள்ளிட்ட முதுநிலை மாணவா்கள், கற்பிக்கும் ஆசிரியா்கள், துறை வல்லுநா்கள் ஆகியோா் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவா்கள். இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் மாா்ச் 28 -ஆம் தேதிவரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஸ்ரீச்ழ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை ஏப்.4-ஆம் தேதிக்குள் நேரடியாக பல்கலைக்கழகத்தில் சமா்ப்பிக்கவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.