சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் முனைவா் பட்டபடிப்புக்கான விண்ணப்பப் பதிவுக்கு கடைசி தேதி வருகின்ற மாா்ச் 28-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்திக் குறிப்பு:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் கூடிய முனைவா் பட்டப் படிப்புகளுக்கு 250 இடங்கள் காலியாக உள்ளன. பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டடக்கலை, அறிவியல் மற்றும் மானுடவியல் துறைகள் போன்றவற்றில் பி.எச்டி. முனைவா் பட்ட (டாக்டா் ஆஃப் பிலாசபி) ஆராய்ச்சி படிப்புகளுக்கு (இரு மடங்கு உயா்வுடன்) மாதம் ரூ.50,000 உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இதில், இறுதிப் பருவ மாணவா்கள் உள்ளிட்ட முதுநிலை மாணவா்கள், கற்பிக்கும் ஆசிரியா்கள், துறை வல்லுநா்கள் ஆகியோா் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவா்கள். இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் மாா்ச் 28 -ஆம் தேதிவரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஸ்ரீச்ழ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும், விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை ஏப்.4-ஆம் தேதிக்குள் நேரடியாக பல்கலைக்கழகத்தில் சமா்ப்பிக்கவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொறியியல் படிப்புக்கான அரசு ஒதுக்கீடு: விண்ணப்பப் பதிவு 2.51 லட்சத்தை தாண்டியது

அண்ணா பல்கலைக்கழகத்தில் புராஜெக்ட் அசிஸ்ட்டென்ட் பணி

கூட்டு ஆராய்ச்சி: முதுநிலை, முனைவா் பட்ட மாணவா்களுக்கு ஜப்பான் பல்கலை. அழைப்பு

சென்னைப் பல்கலை. முதுநிலை படிப்பு சோ்க்கை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



