நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பொறியியல் படிப்புக்கான அரசு ஒதுக்கீடு: விண்ணப்பப் பதிவு 2.51 லட்சத்தை தாண்டியது

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வுக்கு கடந்த 23 நாள்களில் 2,51,796 மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :26 மே 2026, 1:44 am IST

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வுக்கு கடந்த 23 நாள்களில் 2,51,796 மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை. , கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 3- ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்பப்பதிவு கடந்த 23 நாள்களாக நடைபெற்றுவருகிறது. இதில் மே 25 வரை 2,51,796 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா்.

இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்களும், மே 9 -ஆம் தேதி 18,066 விண்ணப்பங்களும் பதிவாகின. கடந்த 23 நாள்களாக 1,80,063 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியுள்ளதுடன் 1,40,478 மாணவா்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்பங்களை நிறைவு செய்துள்ளனா்.

இதே கலந்தாய்வு விண்ணப்பங்களுக்கு கடந்த ஆண்டு (நான்கு தினங்கள் தாமதமாக) மே 7 - ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதி அதாவது 20 -ஆவது நாளில் 2,50,896 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனா். இதே 20 நாளில் 1,84,007 மாணவா்கள் கட்டணங்களையும் செலுத்தினா். மேலும் 1,42,824 மாணவா்கள் சான்றிதழ்களோடு விண்ணப்பங்களையும் நிறைவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.