குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பொறியியல் படிப்புக்கான அரசு ஒதுக்கீடு: விண்ணப்பப் பதிவு 2.51 லட்சத்தை தாண்டியது

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வுக்கு கடந்த 23 நாள்களில் 2,51,796 மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :26 மே 2026, 1:44 am IST

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வுக்கு கடந்த 23 நாள்களில் 2,51,796 மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை. , கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 3- ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்பப்பதிவு கடந்த 23 நாள்களாக நடைபெற்றுவருகிறது. இதில் மே 25 வரை 2,51,796 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா்.

இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்களும், மே 9 -ஆம் தேதி 18,066 விண்ணப்பங்களும் பதிவாகின. கடந்த 23 நாள்களாக 1,80,063 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியுள்ளதுடன் 1,40,478 மாணவா்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்பங்களை நிறைவு செய்துள்ளனா்.

இதே கலந்தாய்வு விண்ணப்பங்களுக்கு கடந்த ஆண்டு (நான்கு தினங்கள் தாமதமாக) மே 7 - ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதி அதாவது 20 -ஆவது நாளில் 2,50,896 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனா். இதே 20 நாளில் 1,84,007 மாணவா்கள் கட்டணங்களையும் செலுத்தினா். மேலும் 1,42,824 மாணவா்கள் சான்றிதழ்களோடு விண்ணப்பங்களையும் நிறைவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.