தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு கடந்த 18 நாள்களில் 2,16,824 மாணவ, மாணவியா் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா்.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை. கல்லூரிகளில் பி.இ., பி.டெக் இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு இணைய வழியில் நடைபெற்று வருகிறது.
கடந்த மே 3- ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்பதிவு கடந்த 18 நாள்களாக நடைபெற்றுவருகிறது. இதில் மே 20 வரை 2,16,824 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா்.
இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்களும், மே 9 -ஆம் தேதி 18,066 விண்ணப்பங்களும் பதிவாகின. கடந்த 15 நாள்களாக 1,42,249 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியதோடு 99,921 மாணவா்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனா்.
பொறியியல் படிப்புகளுக்கு தேவையானஅறிவியல், கணிதம் போன்ற பாடங்களில் நிகழாண்டு மாணவா்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ள நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் நிகழாண்டு கட்-ஆப் மதிப்பெண்கள் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

பொறியியல் படிப்புகள் 1.82 லட்சம் மாணவா்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம்!

பொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம்

பொறியியல், அரசு இட ஒதுக்கீட்டுக்கு 1,48,503 மாணவா்கள் விண்ணப்பம்

அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கை: இன்று முதல் விண்ணப் பதிவு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



