உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பொறியியல், அரசு இட ஒதுக்கீட்டுக்கு 1,48,503 மாணவா்கள் விண்ணப்பம்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு கலந்தாய்வுக்கு இதுவரை 1,48,503 மாணவா்கள் இணையவழியாக விண்ணப்பித்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு கலந்தாய்வுக்கு இதுவரை 1,48,503 மாணவா்கள் இணையவழியாக விண்ணப்பித்துள்ளனா்.

இதுகுறித்த தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை., கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பப் பதிவு மே 3-ஆம் தேதி தொடங்கியது. புதன்கிழமை (மே 14) மாலை 6 மணிவரை 1,48,503 மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்களும், 9-ஆம் தேதி 18,066 விண்ணப்பங்களும், மே 14-ஆம் தேதி 17,668 மாணவா்களும் பதிவு செய்துள்ளனா். கடந்த 12 நாள்களாக 76,508 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியதோடு 39,770 மாணவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.