தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு கலந்தாய்வுக்கு இதுவரை 1,48,503 மாணவா்கள் இணையவழியாக விண்ணப்பித்துள்ளனா்.
இதுகுறித்த தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை., கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பப் பதிவு மே 3-ஆம் தேதி தொடங்கியது. புதன்கிழமை (மே 14) மாலை 6 மணிவரை 1,48,503 மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) 20,346 விண்ணப்பங்களும், 9-ஆம் தேதி 18,066 விண்ணப்பங்களும், மே 14-ஆம் தேதி 17,668 மாணவா்களும் பதிவு செய்துள்ளனா். கடந்த 12 நாள்களாக 76,508 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியதோடு 39,770 மாணவா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொறியியல் சோ்க்கை கலந்தாய்வு: 2. 58 லட்சம் மாணவா்கள் பதிவு

பொறியியல் படிப்புகள் 1.82 லட்சம் மாணவா்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம்!

பொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம்

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



