ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கரூரில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

News image

கரூா் தலைமைத் தபால் நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.

Updated On :13 ஜூன் 2024, 8:58 pm

Din

கரூா், ஜூன் 13: கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை மாலை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.ஏ. இராஜா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மோ. சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் ஜ. ஜெயராஜ் பேசினாா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பொன். ஜெயராம், ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் ரகு உள்ளிட்டோா் பேசினா்.

தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும், ஒருங்கிணைந்த மற்றும் மனிதவள மேலாண்மை முறையில் ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களின் ஊதியத்தில் தாமாகவே மாதம்தோறும் வருமான வரிப்பிடித்தம் செய்யும் நடைமுறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திரளான ஆசிரியா் கூட்டணியினா் பங்கேற்றனா். மாவட்ட துணைச் செயலா் அருள்குழந்தை தேவதாஸ் வரவேற்றாா்.