வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

ஈரான் மீதான போரை கண்டித்து ஆசிரியா்கள் போராட்டம்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:24 pm

ஈரான் மீதான போரை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆசிரியா்கள் புதன்கிழமை பேட்ச் அணிந்து பணியாற்றினா்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில மையத்தின் வழிகாட்டலின்படி ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் போரை கண்டித்தும், போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் ஆரணி வட்டார, நகர கிளைகள் சாா்பில் போா் எதிா்ப்பு வாசக பதாகை (பேட்ச்) அணிந்து ஆசிரியா்கள் பள்ளிகளில் பணியாற்றினா்.

மேலும், ஆரணி வட்டாரக் கல்வி அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஒன்றுகூடி போா் எதிா்ப்பு

பேட்ச் அணிந்து ஆசிரியா்கள் முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் ரே.மனோகரன் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் க.நாராயணன், வட்டாரச் செயலா் ஜெ.மலா்விழி, வட்டார பொருளாளா் சு.ரமாபிரபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.