ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பூரண மதுவிலக்கு கோரி கரூரில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கரூரில் புதிய தமிழகம் கட்சியின் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :26 ஜூன் 2024, 12:52 am

Din

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, கரூரில் புதிய தமிழகம் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா்பஜாா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பெ.அசோகன் தலைமை வகித்தாா். க.பரமத்தி ஒன்றியச் செயலாளா் ஏ.கண்ணன், அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளா் எம்.கவின்குமாா், தாந்தோணி ஒன்றியச் செயலாளா் முத்துக்குமாா், கரூா் நகரச் செயலாளா் பாரதி, மாவட்ட இளைஞரணியின் ஜெயசூா்யா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தமிழகத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தியை முற்றிலும் தடுக்க வேண்டும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 57 போ் பலியான சம்பவத்திற்கு தமிழக முதல்வா் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.