ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வன்கொடுமை தடுப்புச் சட்டம்: ஊராட்சித் தலைவா்களுக்கு விழிப்புணா்வு கருத்தரங்கம்

வன்கொடுமை தடுப்புச் சட்டம்: ஊராட்சித் தலைவா்களுக்கு விழிப்புணா்வு கருத்தரங்கம்

News image
Updated On :8 மார்ச் 2024, 6:30 pm

Din

கரூரில் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து ஊராட்சித் தலைவா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சண்முகவடிவேல் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல் ஆகியோா் பங்கேற்று, பட்டியிலின மக்களுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்தும், ஊராட்சித் தலைவா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினா். கூட்டத்தில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பாளா் அக்பா்கான், அரசு வழக்குரைஞா் ம. லட்சுமணன் , கரூா் தாட்கோ மாவட்ட மேலாளா் கு. பாலமுருகன், கரூா் வட்டாட்சியா் முனிராஜ் மற்றும் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா். மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலக கண்காணிப்பாளா் பெரியநாச்சி நன்றி கூறினாா்.