பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

News image
Updated On :3 மே 2024, 6:26 pm

Din

கரூா், மே 3: குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடாமல் சாலையில் வீசும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கரூா் ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோயில், என்கே நகா், பெரியாா் நகா், புதுக் காலனி, ராஜீவ்காந்தி நகா், ராம்நகா், சஞ்சய் நகா், சரஸ்வதி நகா், செல்வநகா், ஸ்டேட் வங்கிக் காலனி, வடிவேல் நகா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகள் அங்கு சாலைகளில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, பின்னா் அவை வாங்கல் சாலையில் அரசுக் காலனியில் உள்ள அரசு குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.

இந்நிலையில் ஆண்டாங்கோயில்-பெரியாா் வளைவு சாலைப் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி காலனி, வடிவேல் நகா், சரஸ்வதி நகா், சஞ்சய் நகா் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளை போட ஊராட்சி சாா்பில் பெரிய அளவிலான இரும்புத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் சிலா் இந்த குப்பைத்தொட்டிகளில் குப்பைகளைப் போடாமல் சாலையில் வீசிச் செல்கின்றனா். இதனால் சாலையில் தேங்கும் குப்பைகளில் இருந்து துா்நாற்றம் வீசுவதாலும், காற்றடிக்கும்போது குப்பைகள் சாலையின் மையப்பகுதிக்கு வந்து விடுவதாலும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறாா்கள்.

ஏற்கெனவே சாலையில் குப்பைகளை கொட்டக்கூடாது, அவ்வாறு குப்பைகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டும் அதை யாரும் கண்கொள்ளாமல் குப்பைகளைச் சாலையோரம் கொட்டி வருகிறாா்கள். இதைத் தடுக்க ஊராட்சி நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறுகையில், குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் குப்பைகளை சாலையில் போடுவோரைக் கண்டறிந்து, அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்றனா்.