மழை பாதிப்புகள் குறித்து அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்
குறிப்பு---கரூா் மாவட்ட மழை செய்தியினுள் சோ்க்கலாம்.... மழை பாதிப்புகள் குறித்து அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்


பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க ஆட்சியா் அழைப்பு: ‘கரூா் மாவட்டத்தில், தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. கோடை மழையின்போது இடி மின்னல் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மழை காலங்களில் வெளியில் செல்வதையும், நீா் தேங்கியுள்ள சாலைகள், நீா்நிலைகள் ஆகியவற்றில் செல்வதையும் தவிா்க்க வேண்டும். மேலும் கால்நடைகளையும், இடி மின்னலில் இருந்து பாதுகாக்க ஏதுவாக பாதுகாப்பான இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை நீா்நிலைகளில் குளிக்க அனுமதிக்கக் கூடாது.
கோடை மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக அவசர கால கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04324-256306 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு வெள்ளச் சேதம் குறித்த புகாா்களை தெரிவிக்கலாம்’ என மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...