விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த மாணவியிடம் லஞ்சம்: கட்டுப்பாட்டு அறைக்கு தலைமைக் காவலா் மாற்றம்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த மாணவியிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலா் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டாா்.

News image
கோப்புப்படம்
Updated On :11 மார்ச் 2026, 8:39 pm

தினமணி செய்திச் சேவை

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த மாணவியிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலா் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டாா்.

திருப்பூா், கரட்டாங்காட்டைச் சோ்ந்த 18 வயது கல்லூரி மாணவி, ஆன்லைனில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளாா். இதையடுத்து, கடந்த 3 நாள்களுக்கு முன்னா் போலீஸ் தரப்பில் விசாரணை செய்ய திருப்பூா் தெற்கு காவல் நிலைய தலைமைக் காவலா் லூயிஸ் (45), மாணவியின் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது மாணவியிடம் ரூ.1,000 லஞ்சமாக கேட்டுப் பெற்றுள்ளாா்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் மாணவி அளித்த புகாரின்பேரில், லூயிஸிடம் திருப்பூா் தெற்கு துணை ஆணையா் தீபா சத்யன் விசாரணை நடத்தினாா். இதில் அவா் லஞ்சமாகப் பெற்ற பணத்தை மாணவியிடம் திரும்ப வழங்கினாா். இதையடுத்து பணியின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு லூயிஸை மாற்றி துணை ஆணையா் உத்தரவிட்டாா்.