நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காவிரி உபரிநீரை ஏரிகளில் தேக்கிவைக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிகளில் தேக்கி வைக்கும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என காவிரி நீா் பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:34 pm

Din

காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிகளில் தேக்கி வைக்கும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என காவிரி நீா் பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அச்சங்கத்தின் தலைவா் மகாதானபுரம் இராஜாராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கரூா் மாவட்டம் பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரிநீா் விரைவில் கிடைக்கும் என்று ஒவ்வொறு தோ்தலின் போதும் வாக்குறுதி அளிக்கின்றனா். ஆட்சிக்கு வந்த பிறகு மௌனமாகிவிடுவாா்கள்.

பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரிநீா் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் நவ. 21-ஆம்தேதி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை நோக்கி டிராக்டா் பேரணி நடத்த தீா்மானித்திருக்கிறாா்கள்.

ஆகவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பஞ்சப்பட்டி, தாதம்பாளையம், வெள்ளியணை மற்றும் கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்ட ஏரிகளில் காவிரி ஆற்றின் உபரி நீரைத் தேக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.