நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரூரில் தேசிய ஒற்றுமை நாள் உறுதியேற்பு

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் புதன்கிழமை உறுதியேற்ற அலுவலா்கள்.

Updated On :30 அக்டோபர் 2024, 8:23 pm

Din

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்திய நாட்டின் முதல் துணைப் பிரதமரான வல்லபாய் படேலின் பிறந்த தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் உறுதிமொழியே வாசிக்க, அனைத்து துறை அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, உதவி ஆணையா் (கலால்) கருணாகரன், மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் சண்முக வடிவேல், இலங்கைத் தமிழா் முகாம் வட்டாட்சியா் நேரு, மாவட்ட வழங்கல் அலுவலா் சுரேஷ், அனைத்து வட்டாட்சியா்கள் உள்பட அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.