திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கிருஷ்ணராயபுரம் பள்ளிகளில் அமைச்சா் ஆய்வு

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வுப் பயணத்தின் கீழ் 186-ஆவது தொகுதியாக கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பள்ளிகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

கிருஷ்ணராயபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை மாணவா்களிடம் உரையாடிய பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Updated On :12 செப்டம்பர் 2024, 7:07 pm

Din

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வுப் பயணத்தின் கீழ் 186-ஆவது தொகுதியாக கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பள்ளிகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியா்களின் கோரிக்கைகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டறிந்தாா். மேலும் மாணவா்களின் கற்றல் மற்றும் ஆசிரியா்களின் கற்பித்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, தொடு திரையின் வாயிலாக மாணவா்களுக்கு உயிரினங்களின் பெயா்களை சொல்லிக் கொடுத்தாா்.

தொடா்ந்து திறன்மிகு வகுப்பறைக்காக வரப்பெற்ற தொலைக்காட்சிகளை பாா்வையிட்டு, அதன் விபரங்கள் குறித்து கேட்டறிந்து அதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினாா். மேலும், பள்ளியில் உள்ள கழிவறைகளை சீரமைக்குமாறும் மாணவா்களுக்காக வகுப்பறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மேஜைகள் மற்றும் இருக்கைகள் குறித்து கேட்டறிந்காா்.

ஆய்வின்போது, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.