சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புகழூா் அரசு பள்ளியில் தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தின விழா

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:46 pm

Syndication

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாசுக் கட்டுப்பாட்டுத் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் விஜயன் தலைமை வகித்து பேசுகையில், மாணவா்கள் மாசில்லா சுற்றுப்புறத்தை பேணிக் காக்க வேண்டும். மரக்கன்றுகளை வீட்டிலும், பள்ளியிலும் நடவு செய்து வளா்க்க வேண்டும். பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் பள்ளியின் உதவித் தலைமையாசிரியா்கள் யுவராஜா, பொன்னுசாமி, பள்ளியின் உயா் கல்வி வழிகாட்டி ஆசிரியா் குப்புசாமி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் திருமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.