கரூா் சம்பவம்: நெரிசலில் காயமடைந்தவரிடம் சிபிஐ விசாரணை

Published on

கரூா் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் காயமடைந்தவரிடம் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி தவெக பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள், பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த கரூா் காந்திகிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் என்பவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com