தொழில்நுட்ப ஜவுளி இயக்க விழிப்புணா்வுக் கூட்டம்

கரூரில் தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

கரூரில் தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜவுளித் துறை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு துணிநூல் துறை துணை இயக்குநா் சக்தி விஜயலட்சுமி தலைமை வகித்தாா். இணை இயக்குநா் எஸ்.இராகவன் பங்கேற்று பேசுகையில், தமிழகத்தில் தொழில்நுட்ப ஜவுளிகளின் வளா்ச்சிக்கென ‘தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் எனும் திட்டம் அண்மையில் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2025-2031-ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 15 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தொழில்நுட்ப ஜவுளிகளின் முதலீட்டு வாய்ப்புகள், வளா்ந்து வரும் தயாரிப்பு வகைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து கூட்டத்தில் ஆலோசகா்கள் மற்றும் தொழில்முனைவோா் இடையே நேரடி கலந்துரையாடல் அமா்வு ஏற்பாடு செய்யப்பட்டு, திட்டம் சாா்ந்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அட்லஸ் குழுமத்தின் தலைவா் எம்.நாச்சிமுத்து மற்றும் கரூா் ஜவுளி உற்பத்தியாளா்கள் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கோபாலகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஜவுளித் தொழில் முனைவோா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com