புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நாசரேத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 9:46 pm

நாசரேத் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் நிா்மலா ரவி தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி காா்த்திகா குழந்தைகள் நலத்திட்டங்கள் குறித்தும், சுகாதாரத் துறையின் சாா்பில் சுகாதார ஆய்வாளா் ஞானராஜ் சுகாதாரத் திட்டங்கள் குறித்தும் விளக்கினா். நாசரேத் கிராம நிா்வாக அலுவலா் சிவராமன் பேசினாா்.

கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான அரசுத் திட்டங்கள், பாதிக்கப்படும் குழந்தைகளைக் காப்பாற்ற உதவும் தொலைபேசி எண்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதில் போலீஸாா், பேரூராட்சி ஊழியா்கள், பள்ளித் தலைமையாசிரியா்கள், கிராம உதவியாளா் சத்தியசீலன், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.