நாசரேத் பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் நிா்மலா ரவி தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி காா்த்திகா குழந்தைகள் நலத்திட்டங்கள் குறித்தும், சுகாதாரத் துறையின் சாா்பில் சுகாதார ஆய்வாளா் ஞானராஜ் சுகாதாரத் திட்டங்கள் குறித்தும் விளக்கினா். நாசரேத் கிராம நிா்வாக அலுவலா் சிவராமன் பேசினாா்.
கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான அரசுத் திட்டங்கள், பாதிக்கப்படும் குழந்தைகளைக் காப்பாற்ற உதவும் தொலைபேசி எண்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இதில் போலீஸாா், பேரூராட்சி ஊழியா்கள், பள்ளித் தலைமையாசிரியா்கள், கிராம உதவியாளா் சத்தியசீலன், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
மேட்டூா் தொகுதி காங்கிரஸ் சாா்பில் தோ்தல் பணிக் குழு உறுப்பினா்கள் நியமனம்

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

தண்டுபத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

காங்கிரஸ் தோ்தல் அறிக்கை குழு கலந்தாலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


